வட்ட வெண்ணிலவே,
வானம் விட்டு வந்ததிங்கே...
அழகே, பேரழகே,
சந்திரன் தான் வந்ததிங்கே...
தாழம்பூ உன் தேகம்,
மகிழம்பூ உன் மேனி மணம்...
தங்க தட்டதிலே உன் சோறு,
வெள்ளி நிலா விளையாடு...
(ஆரி... )
பளிங்குக் கல் பார்வையிலே,
வெண்குவளை சிவந்திடுமே...
முத்து முத்தாய் உன் பேச்சில்,
முக்குளிசேன் நான் மூச்சடசேன்...
(ஆரி... )
மன்மதனே.. உன் சிரிப்பில்
இம்மண்டலமே மயங்குதடா...
ஊர் மயங்க, உன் ஊன் அசந்து,
விழியுறங்கு என் வள்ளவனே !!
(ஆரி... )
No comments:
Post a Comment