அறியாமல் நெருங்கினேன்,
அறிந்ததும் விரும்பினேன்;
புரியாமல் பேசினேன்,
புரிந்ததும் ரசித்தேன்;
புதிரான உறவிற்கு,
பிரியா வரம் வேண்டி, விடையும் அறிந்தேன்!
இது "நேசமிகுந்த நட்பு" என்றதும்
நெகிழ்ந்து நின்றேன் !!
அழகியலின் குறுகிய சிந்தனை –
அழகிய பொய்கள் பொதிந்த கவிதை வரிகள் ...
எனது சிந்தனை சிதறல்கள்,
உன் நினைவுகள் மட்டும் மிஞ்சிய நேசத்துடன் முற்றும் .
1 comment:
Post a Comment